திருப்பம் 1
திருப்பங்கள் பகுதி1
1. ஊருக்குள்ளே இருந்து ஒருவன் பாடுகிறான்
தெளிந்தவானில் தோன்றும் திங்கள்
தேயும் பின் முழுதாகும்
நெளிந்து ஓடும் நீரலை கடலில்
நெகிழ்ந்தும் பின்னெழும் ஓங்கும்
ஒளிந்து ஆழியில் விழுந்த கதிரும்
உதயம் காலையில் மின்னும்
பளிங்கு போல் எழில் பாடும் தமிழும்
பாரினில் மறுபடி எழுமோ
குளிர்ந்த காற்றும் குலவிடும் சமயம்
கொள்ளும் கோபப் புயலாம்
வெளிர்ந்தமேகம் விண்ணிடைஓடும்
வேண்டின் இடியொடு மின்னும்
ஒளிர்ந்த வாழ்வை ஒழித்திட வந்தான்
உரமும் கொண்டோம் எழுந்தோம்
தளர்ந்து ஒடச் செய்தோம் பகையைச்
தரணி வெகுண்டது ஏனோ
கருத்த இரவும் நிலையென் றில்லைக்
காணும்விடியல் ஒளியும்
பருத்த இடியும் பெருமழைகூடப்
பணியும் மறுபடி வீசும்
குருத்துமேனி குழந்தைகள் அன்னை
கொன்றவன் மட்டும் முற்றாய்
ஒருத்தனில்லாத் தமிழினம் கொல்ல
உலகம் பொறுத்திடலாமோ
வெளுத்த முகமும் விழிநீர்சிந்த
விடியலைத்தேடி அலைந்தோம்
கழுத்து வெட்டிக் குழிகளை மூட
கதறித் தேகம் துடித்தோம்
பழுத்த கனியா பச்சைக் காயா
பட்டிதழ் பூவா இலையா
விழுத்தி வெறியர் வெட்டியழிக்க
வியந்து கிடந்த உலகம்
அழுதோம் எத்தனை ஆயிரம் ஆயிரம்
ஐயோ துடி துடித்தோமே
தொழுதும் உயிரைக் காத்திடக் கேட்டே
தெருவெங்கும் அலைந்தோமே
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம்
எம்மினம் கொல்லக்கண்டும்
தழுவிக் காக்கும் எண்ணமும் கொள்ளாத்
தவறியதேன் தாய்நாடே!
2. ஊரின் புறத்தே!
ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்
வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்
நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ
கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)
திருப்பங்கள் பகுதி1
1. ஊருக்குள்ளே இருந்து ஒருவன் பாடுகிறான்
தெளிந்தவானில் தோன்றும் திங்கள்
தேயும் பின் முழுதாகும்
நெளிந்து ஓடும் நீரலை கடலில்
நெகிழ்ந்தும் பின்னெழும் ஓங்கும்
ஒளிந்து ஆழியில் விழுந்த கதிரும்
உதயம் காலையில் மின்னும்
பளிங்கு போல் எழில் பாடும் தமிழும்
பாரினில் மறுபடி எழுமோ
குளிர்ந்த காற்றும் குலவிடும் சமயம்
கொள்ளும் கோபப் புயலாம்
வெளிர்ந்தமேகம் விண்ணிடைஓடும்
வேண்டின் இடியொடு மின்னும்
ஒளிர்ந்த வாழ்வை ஒழித்திட வந்தான்
உரமும் கொண்டோம் எழுந்தோம்
தளர்ந்து ஒடச் செய்தோம் பகையைச்
தரணி வெகுண்டது ஏனோ
கருத்த இரவும் நிலையென் றில்லைக்
காணும்விடியல் ஒளியும்
பருத்த இடியும் பெருமழைகூடப்
பணியும் மறுபடி வீசும்
குருத்துமேனி குழந்தைகள் அன்னை
கொன்றவன் மட்டும் முற்றாய்
ஒருத்தனில்லாத் தமிழினம் கொல்ல
உலகம் பொறுத்திடலாமோ
வெளுத்த முகமும் விழிநீர்சிந்த
விடியலைத்தேடி அலைந்தோம்
கழுத்து வெட்டிக் குழிகளை மூட
கதறித் தேகம் துடித்தோம்
பழுத்த கனியா பச்சைக் காயா
பட்டிதழ் பூவா இலையா
விழுத்தி வெறியர் வெட்டியழிக்க
வியந்து கிடந்த உலகம்
அழுதோம் எத்தனை ஆயிரம் ஆயிரம்
ஐயோ துடி துடித்தோமே
தொழுதும் உயிரைக் காத்திடக் கேட்டே
தெருவெங்கும் அலைந்தோமே
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம்
எம்மினம் கொல்லக்கண்டும்
தழுவிக் காக்கும் எண்ணமும் கொள்ளாத்
தவறியதேன் தாய்நாடே!
2. ஊரின் புறத்தே!
ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்
வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்
நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ
கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)