திருப்பம் பகுதி 4
7. ஊரின் மத்தியில்:
மாவிலைத் தோரணம் மங்கல இன்னிசை
மன்னவன் மாளிகைமுன் - பல
பூநறு வாசமும் புன்னகை யும்கொள
பூரிப்பில் நின்றவர்கள் - சில
ஏவல்கள் வேலைகள் இன்பநல் நாட்டியம்
இத்தனைக் கும்நடுவே - பல
நாவது செந்தமிழ் மீது பகைகொண்டு
நீசமுரைத்திடக் காண்
வென்றோம் அவர்நிலம் என்றோர் உரமிட
வீதியில் கூத்திடுவோர் -இதோ
கொன்றோம் அவரெனக் கூத்திடுவோர் கரம்
கொட்டி சிரித்தனர்காண் - நற்
சான்றோர் கூடும் சபை சட்டதுறைகளும்
சோர்ந்தே வெறுமைகொள்ள - அந்தத்
தேன்தமிழ் பேசிடும் நாட்டினை வென்றவர்
தீமை இழைத்துநின்றார்
வாசலி டைசில வண்ணப்ப தாகைகள்
வாஎன் றழைத்திருக்க - சொந்த
பேசுந்தமிழ் அதிலில்லைப் பிறன்மொழி
பூசிக் கிடந்தன காண் - இவர்
நேசமு டைத்தவ ரல்லர் பகைவரும்
நீதியற்றோர் அரசின் முடி
ஆளும் வகையினில் ஆடிடும் பொம்மையில்
ஆட்சி அமைத்துவிட்டார்
தீங்கிளைக்கும் பகை யோடு நலன்பெற
தோள் கொடுத்தே சிலரும் - கூடி
ஆங்கிருந் தார்அவர் ஆனந்த போதையின்
ஆழமும் காணநின்றார் - இனி
பூங்குயில் கானமும் புத்தொளி வண்ணம்
போதை கொள் மஞ்சமதில் இவர்
தூங்கியெழச் சுக தோரணம், மாலைகள்
தூவிக்கிடந்தன காண்
***************
8. சில மைல்களுக்கப்பால்
உருள் பெரு ஊர்திகள் உளமது கிலிபட
ஊரினுள் நுழைவதையும் அத்
தெருமுழு பேரணி தமிழல்ல யாரெனத்
தவித்தனர் தமிழ்க்குலமும் - இதில்
ஒரு பெரு அழிவென உணர்வுகள் உறுத்திட
உயிர்ப்பய உணர்வெழவே -நல்
பரிவினை விரும்பியும் பலதலைவரின் விழி
பதிவொளி தனை இயக்க
விதி எனும் கருமுகம் கொடுமைகள் விளைத்திட
வழிந்தன வியர்வையல்ல - நல்ல
சதிபதியுடன் தவழ் குழந்தைகள் குரலற
செறிந்தன பிணமலைகள் - ஒரு
கதியின்றி நிசப்தமும் கனவுகள் எனவிழி
கணமதில் ஒளிவிலக - இந்த
மதியுல கதைப் பெரு மதியொடு வலமிடும்
பதிகரு வியில் கண்டார்
(புத்தியுள்ள உலகினர் சந்திரனோடு சேர்ந்து உலகைச் சுற்றும் சற்றலைட் கண்களூடாக கண்டு களித்தனர்
)*****************
10. ...மன்னர் மாளிகையில்....
மாங்கனிச் சாற்றினில் தேன்கலந்தோர் மது
ஊற்றும் இதழுடையா ள் - எழிற்
பூங்குழல் தான்விரித் தோங்கிடும் புன்னகை
பூத்தவள் மன்னவனின் - அயல்
மூங்கிலின் பொன்னெழில் மேவுகரத்துடன்
மெல்லென ஊட்டிவைக்க - கரம்
தாங்கிஒரு பெண்ணும் சாமரை வீசிடும்
தன்மையைப் பேணிநின்றாள்
ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆகாவென விழிகள் - இன்ப
தேனது மாந்தத் திளைத்தவனோ மனம்
தூங்கிக் களித்திருக்க - அயல்
வானது போற்றிடும் மானத்தமிழ்மகன்
வந்துகை கட்டி நின்றான் - என்ன
ஆனது வீரமோ தொன்மைக்கலி புறம்
தானெடு மார்புடையோன்
கூனலில் நெஞ்சுங் குறுகி வளைந்திடக்
காலடி நின்றவன்காண் - தமிழ்
மானமும் விட்டவன் மஞ்சத்தில்; தூங்கிட
மாறிக் கிடந்தவனும் -அந்த
ஆனந்த வேளையில் கூச்சலும் சத்தமும்
அண்மை எழுந்துவர - என்ன
ஆனது எண்ணிட முன்னர் விரைந்தொரு
ஆபத்தென உணர்ந்தான்
கொல் லுடன்கொல் எனக். கூவித்துடித்தனர்
கொன்று இனமழிப்போர் அட
நில்லென உள்ளமும் சொல்லிடும்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் - இவர்
வெல்லென வீணரை வேண்டிஉதவிய
வெற்று மதியூகத்தை என்றும்,
கொல்லுமினம் தன்னைக் கொள்கை சிதைவுறக்
கொல்வரோ எண்ணிநொந்தான்
(தொடரும்)
7. ஊரின் மத்தியில்:
மாவிலைத் தோரணம் மங்கல இன்னிசை
மன்னவன் மாளிகைமுன் - பல
பூநறு வாசமும் புன்னகை யும்கொள
பூரிப்பில் நின்றவர்கள் - சில
ஏவல்கள் வேலைகள் இன்பநல் நாட்டியம்
இத்தனைக் கும்நடுவே - பல
நாவது செந்தமிழ் மீது பகைகொண்டு
நீசமுரைத்திடக் காண்
வென்றோம் அவர்நிலம் என்றோர் உரமிட
வீதியில் கூத்திடுவோர் -இதோ
கொன்றோம் அவரெனக் கூத்திடுவோர் கரம்
கொட்டி சிரித்தனர்காண் - நற்
சான்றோர் கூடும் சபை சட்டதுறைகளும்
சோர்ந்தே வெறுமைகொள்ள - அந்தத்
தேன்தமிழ் பேசிடும் நாட்டினை வென்றவர்
தீமை இழைத்துநின்றார்
வாசலி டைசில வண்ணப்ப தாகைகள்
வாஎன் றழைத்திருக்க - சொந்த
பேசுந்தமிழ் அதிலில்லைப் பிறன்மொழி
பூசிக் கிடந்தன காண் - இவர்
நேசமு டைத்தவ ரல்லர் பகைவரும்
நீதியற்றோர் அரசின் முடி
ஆளும் வகையினில் ஆடிடும் பொம்மையில்
ஆட்சி அமைத்துவிட்டார்
தீங்கிளைக்கும் பகை யோடு நலன்பெற
தோள் கொடுத்தே சிலரும் - கூடி
ஆங்கிருந் தார்அவர் ஆனந்த போதையின்
ஆழமும் காணநின்றார் - இனி
பூங்குயில் கானமும் புத்தொளி வண்ணம்
போதை கொள் மஞ்சமதில் இவர்
தூங்கியெழச் சுக தோரணம், மாலைகள்
தூவிக்கிடந்தன காண்
***************
8. சில மைல்களுக்கப்பால்
உருள் பெரு ஊர்திகள் உளமது கிலிபட
ஊரினுள் நுழைவதையும் அத்
தெருமுழு பேரணி தமிழல்ல யாரெனத்
தவித்தனர் தமிழ்க்குலமும் - இதில்
ஒரு பெரு அழிவென உணர்வுகள் உறுத்திட
உயிர்ப்பய உணர்வெழவே -நல்
பரிவினை விரும்பியும் பலதலைவரின் விழி
பதிவொளி தனை இயக்க
விதி எனும் கருமுகம் கொடுமைகள் விளைத்திட
வழிந்தன வியர்வையல்ல - நல்ல
சதிபதியுடன் தவழ் குழந்தைகள் குரலற
செறிந்தன பிணமலைகள் - ஒரு
கதியின்றி நிசப்தமும் கனவுகள் எனவிழி
கணமதில் ஒளிவிலக - இந்த
மதியுல கதைப் பெரு மதியொடு வலமிடும்
பதிகரு வியில் கண்டார்
(புத்தியுள்ள உலகினர் சந்திரனோடு சேர்ந்து உலகைச் சுற்றும் சற்றலைட் கண்களூடாக கண்டு களித்தனர்
)*****************
10. ...மன்னர் மாளிகையில்....
மாங்கனிச் சாற்றினில் தேன்கலந்தோர் மது
ஊற்றும் இதழுடையா
பூங்குழல் தான்விரித் தோங்கிடும் புன்னகை
பூத்தவள் மன்னவனின் - அயல்
மூங்கிலின் பொன்னெழில் மேவுகரத்துடன்
மெல்லென ஊட்டிவைக்க - கரம்
தாங்கிஒரு பெண்ணும் சாமரை வீசிடும்
தன்மையைப் பேணிநின்றாள்
ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆகாவென விழிகள் - இன்ப
தேனது மாந்தத் திளைத்தவனோ மனம்
தூங்கிக் களித்திருக்க - அயல்
வானது போற்றிடும் மானத்தமிழ்மகன்
வந்துகை கட்டி நின்றான் - என்ன
ஆனது வீரமோ தொன்மைக்கலி புறம்
தானெடு மார்புடையோன்
கூனலில் நெஞ்சுங் குறுகி வளைந்திடக்
காலடி நின்றவன்காண் - தமிழ்
மானமும் விட்டவன் மஞ்சத்தில்; தூங்கிட
மாறிக் கிடந்தவனும் -அந்த
ஆனந்த வேளையில் கூச்சலும் சத்தமும்
அண்மை எழுந்துவர - என்ன
ஆனது எண்ணிட முன்னர் விரைந்தொரு
ஆபத்தென உணர்ந்தான்
கொல் லுடன்கொல் எனக். கூவித்துடித்தனர்
கொன்று இனமழிப்போர் அட
நில்லென உள்ளமும் சொல்லிடும்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் - இவர்
வெல்லென வீணரை வேண்டிஉதவிய
வெற்று மதியூகத்தை என்றும்,
கொல்லுமினம் தன்னைக் கொள்கை சிதைவுறக்
கொல்வரோ எண்ணிநொந்தான்
(தொடரும்)
No comments:
Post a Comment