திருப்பம் பகுதி 6
12. கொடுங்கோரம்
அன்னை அழுதாள் பிள்ளை அழுதான்
அன்புக் குலமாந்தர்:
மின்னும் இடிகள் கொல்லும் வெடிகள்
முன்னாற் கண்டழுதார்
மன்னன் ஆணை கொல்என்றார்கள்
மரணப்பசி கொண்டே
இன்னுமின்னும் மின்னும்வேகம்
எத்தனை ஆயிரங்கள்
கெஞ்சும் குரல்கள் அஞ்சும்கண்கள்
ஆகா போதை கண்டார்
வஞ்சம் கோபம் வழியும் குருதி
வானப் பிரவேசம்
அஞ்சும் கதறல் ஆறாத்துயரம்
அவலத்தின் எல்லை
மிஞ்சும் வெறிகள் மிரட்டும் சத்தம்
மின்னும் கைவாள்கள்
பிஞ்சுகுழந்தை பேசத்தெரியா
பிதுங்கும் விழிப்பார்வை
பஞ்சுகைகள் பாவமில்லை
பிறந்தோர் பழிதோஷம்
நெஞ்சம் கதறித் துடித்தாலென்ன
நிலமோ அவர் சொந்தம்
நஞ்சு தூவல் நடுங்குமுள்ளம்
நரகத் தலைமை இதோ
பயணம்
போகும்பாதை சொன்னான் அந்தோ
புரவியின் முதுகேறி
ஏகும் வழியைப் புரியாமல்இவ்
இடரில் தவிக்கின்றான்-
வேகங் கொண்டேஓடும்குதிரை
விரையும் வழிமீது
ஆகும் எதனால் அஞ்சித்தானும்
அடங்கா தோடியது
வெள்ளை மீன்கள் வானக்குளத்திலே
விந்தை கண்சிமிட்ட
கொள்ளிப் பேயாய் குட்டைவெளியில்
குறுந்தீ நின்றாட
நள்ளிர வாகும் போதில் எங்கே
நானும் என்றவனை
துள்ளிச்சென்ற குதிரை நிற்க
தூங்கும் விழிநோக்க
செத்தோர்ப் பாதி சாகும்பிணங்கள்
சரிந்தே வீழ்ந்திருக்க
கத்தும் அலறல் கைதுண்டாகி
காற்றில் மணம் வீச
அத்தனைகோரம் அன்னைமண்ணில்
யாரால் இது வெல்லாம்
சத்தம்போட்டு கத்திக்கொண்டான்
என்னால் என்னாலே
அழுதான் மனதில்ஆயிரம் கோடி
அகந்தை வெடித்தோட
பழுதாய்போற்றும் பாவம் தீயில்
பஞ்சாய் பொறிகொள்ள
எழுவாய் உந்தன் உள்ளக் கயமை
உடைபட விதிமாற
தொழுதான் அறமொடு திருந்திய உள்ளத்
திடையோர் திசைமாற
திருப்பம்
பொங்கும் கடல்தனும் பொங்குவதேனென் இவர்
பொங்காநிலைகண்டோ
செங்கதிர் தானும் சிவந்ததுமேன் இச்
சினத்தின் வழிகண்டோ
கங்குல் விடிந்தொளி கொண்டது காலை
கதிரவன் பகைவெல்ல
எங்கும் இருள் கரைந்தோடின இரவின்
கொடுமைப் பிடிவிலக
தொங்கிவிழும் அப்புரவியின் முதுகிடை
துள்ளித் தொற்றியதும்
தெங்குபனவளர் தீந் தமிழ் நாட்டின்
தெருவில் விரைவாக
எங்கும் இலங்கிடு தெய்வபுகழ்திரு
இறையவள் இடம்நோக்கி
பொங்கும்சுடரொளி புலர்ந்திடும்வேளை
போய்வழி அடைகின்றான்
(தொடரும்)
12. கொடுங்கோரம்
அன்னை அழுதாள் பிள்ளை அழுதான்
அன்புக் குலமாந்தர்:
மின்னும் இடிகள் கொல்லும் வெடிகள்
முன்னாற் கண்டழுதார்
மன்னன் ஆணை கொல்என்றார்கள்
மரணப்பசி கொண்டே
இன்னுமின்னும் மின்னும்வேகம்
எத்தனை ஆயிரங்கள்
கெஞ்சும் குரல்கள் அஞ்சும்கண்கள்
ஆகா போதை கண்டார்
வஞ்சம் கோபம் வழியும் குருதி
வானப் பிரவேசம்
அஞ்சும் கதறல் ஆறாத்துயரம்
அவலத்தின் எல்லை
மிஞ்சும் வெறிகள் மிரட்டும் சத்தம்
மின்னும் கைவாள்கள்
பிஞ்சுகுழந்தை பேசத்தெரியா
பிதுங்கும் விழிப்பார்வை
பஞ்சுகைகள் பாவமில்லை
பிறந்தோர் பழிதோஷம்
நெஞ்சம் கதறித் துடித்தாலென்ன
நிலமோ அவர் சொந்தம்
நஞ்சு தூவல் நடுங்குமுள்ளம்
நரகத் தலைமை இதோ
பயணம்
போகும்பாதை சொன்னான் அந்தோ
புரவியின் முதுகேறி
ஏகும் வழியைப் புரியாமல்இவ்
இடரில் தவிக்கின்றான்-
வேகங் கொண்டேஓடும்குதிரை
விரையும் வழிமீது
ஆகும் எதனால் அஞ்சித்தானும்
அடங்கா தோடியது
வெள்ளை மீன்கள் வானக்குளத்திலே
விந்தை கண்சிமிட்ட
கொள்ளிப் பேயாய் குட்டைவெளியில்
குறுந்தீ நின்றாட
நள்ளிர வாகும் போதில் எங்கே
நானும் என்றவனை
துள்ளிச்சென்ற குதிரை நிற்க
தூங்கும் விழிநோக்க
செத்தோர்ப் பாதி சாகும்பிணங்கள்
சரிந்தே வீழ்ந்திருக்க
கத்தும் அலறல் கைதுண்டாகி
காற்றில் மணம் வீச
அத்தனைகோரம் அன்னைமண்ணில்
யாரால் இது வெல்லாம்
சத்தம்போட்டு கத்திக்கொண்டான்
என்னால் என்னாலே
அழுதான் மனதில்ஆயிரம் கோடி
அகந்தை வெடித்தோட
பழுதாய்போற்றும் பாவம் தீயில்
பஞ்சாய் பொறிகொள்ள
எழுவாய் உந்தன் உள்ளக் கயமை
உடைபட விதிமாற
தொழுதான் அறமொடு திருந்திய உள்ளத்
திடையோர் திசைமாற
திருப்பம்
பொங்கும் கடல்தனும் பொங்குவதேனென் இவர்
பொங்காநிலைகண்டோ
செங்கதிர் தானும் சிவந்ததுமேன் இச்
சினத்தின் வழிகண்டோ
கங்குல் விடிந்தொளி கொண்டது காலை
கதிரவன் பகைவெல்ல
எங்கும் இருள் கரைந்தோடின இரவின்
கொடுமைப் பிடிவிலக
தொங்கிவிழும் அப்புரவியின் முதுகிடை
துள்ளித் தொற்றியதும்
தெங்குபனவளர் தீந் தமிழ் நாட்டின்
தெருவில் விரைவாக
எங்கும் இலங்கிடு தெய்வபுகழ்திரு
இறையவள் இடம்நோக்கி
பொங்கும்சுடரொளி புலர்ந்திடும்வேளை
போய்வழி அடைகின்றான்
(தொடரும்)
No comments:
Post a Comment