திருப்பம் பகுதி 5
11. தேசத்தின் ஒரு புறம்
பூங்கணை எய்தவன் புண்படுமேனியை
போதையிடும் ஒருத்தி - இரு
தேங்கிய கண்களில் தித்திக்குதோ எனும்
தேவை பார்த்திருக்க - அவள்
தாங்கிய கைகளில் தாமரைபூ இதம்
தன்னை உணர்ந்தவனாய் - அங்கு
ஆங்கவள் மேனியில் அத்தனைஇன்பமென்
றன்பில் திளைத்தவனை
ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆற்றலில் தூரநின்றே - இனி
தேனது மாந்திய வேளையில் திடுமென
தடதடவெனும் சத்தம் - அட
ஏனது கூச்சலும் இத்தனை சத்தமும்
என்றயல் கேட்டெழவும் - ஆ..
போனதுன் உயிருடன் புறப்படு காத்திட
பின்னிருந் தொலி கேட்டான்
மன்னவனே தமிழ் சொல்லுவதால் உமை
மரணத் தேவியவள் - இனி
தன்னுடைகரமதில் தாங்கிட வருகிறாள்
தருமம் காக்குமெனில் - ஒரு
மின்னும் கணந்தன்னில் விட்டுபறந்திடு
மேனியும் வேண்டுமெனில் - உடன்
என்றவன் இயம்பிட இருக்கைவிட்டுமே
எழுந்தான் வழி நடந்தான்
கொல் உடன்கொல் என்று கூறித்துடித்தனர்
கொன்றே இனமழிப்போர்- பொய்
நில்லென உள்ளமும் சொல்லிடு ம்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் -இவர்
வெல்லென வீணரை வேண்டின உதவிய
வெற்று மதித்திறமும் - போய்ச்
சில்லெனும் உணர்வுகள் சீரளித்தேன் எனும்
சிறுமை யுணர்ந் தகன்றான்
கேட்டு ஒலிதிட்ட கூச்சலுக்கிடையினில்
கிழக்கொரு மண்டபத்தில் - எழிற்
பாட்டுமிசைத் தொலி கூட்ட மலர்க்கொடி
போலொரு கோதை நடம்- தனும்
ஆட்டமும் கொண்டிட ஆனந்தம் மேலிட
ஆகும் நிலைமை தனை இந்த
நாட்டைப் பிடித்திட்ட நஞ்சவ ரோடுடன்
நின்றவன் கண்டு கொண்டான்
தீட்டிய வேல்விழி திங்களெனும் முகத்
தேவதை ஆடிநிற்க - அவள்
பூட்டிய கொல்லெனும் பூமலர்பாதப் -
புறத்திரு பொற்சதங்கை -உடன்
காட்டிய தோஒலி கொல் என்றொலித்திடக்
கேட்டவன் தன்நிலையை
சாட்டியதாய் பழிகொண்டு நகைப்பினைச்
சார்ந்தது போலிருக்க
கூட்டியதாரென கோபங்கொண்டு ஆ..
கோதை நிறுத்துமென்றான்
தீட்டிய பொன்விழி திக்கில் திரும்பிடத்
தேவதை போலெழிலாள்
காட்டிய ஏளனம் கண்களில் மின்னிட
கன்னம் சிவந்தவளோ
ஆட்டம் நிறுத்திடும் எண்ணமில்லை அவள்
அவள் ஆடிக்கொண்டே யிருந்தாள்
வாட்டிய துன்பமும் அஞ்சும் மனத்துடன்
வந்த இடர்நிலையும்
கேட்டகொலை யெனும் கூச்சலும்சத்தமும்
கனவோ முறையறிய
ஈட்டி பிடித்தொரு சேவகன் நின்றிட
யாரங்கே என்றழைத்தான்
காட்டிவிரல் கொண்டு ஏவிய மன்னனை
காணா தவன் நடந்தான்
நாட்டிடை குறுநிலம் ஆளுவன் என்றொரு
நாமம் எனக்கெதற்கு
வீட்டினில் ஆடவன் கொள்ளும் மதிப்பதும்
வீழ்ச்சி யென்றே யிருக்க
தேட்டமும் செல்வமும் தந்தவர் நெஞ்சினில்
தீமை விஷம் இருக்கும்
காட்டிய அன்பிலும் கையணைக்கும் விதம்
காரணம் வேறிருக்கும்
வெட்ட வளர்த்திடும் ஆட்டின்நிலையென
வீரமும் விட்டுலைந்து
குட்டவும் குனிந்திடும் குவலய வாழ்வதில்
கொண்ட மகிழ்வுமென்ன
விட்டபிழைகளை முற்றும் திருத்திட
வேளை பிறந்திடுமோ
திட்டமிட்டே திசை மாற்றி நடந்தனன்
தேவை திருப்பமொன்றோ
போகட்டும் என்றுள முள்ளே குமுறிய
போதிலும் நொந்து மனம்
தீகொட்டும் வேதனை செல்லாக் காசென
சில்லறை யாக்கியதேன்
போர் கொட்டும்மேளமும் பொல்லாப்பகைதனை
பொற்றமிழ் மோதிநிற்க
வாய்கட்டி மௌனமும் வார்த்தை கெட்டேமனம்
வாழ்ந்திடும் தேவையென்ன
(தொடரும்)
11. தேசத்தின் ஒரு புறம்
பூங்கணை எய்தவன் புண்படுமேனியை
போதையிடும் ஒருத்தி - இரு
தேங்கிய கண்களில் தித்திக்குதோ எனும்
தேவை பார்த்திருக்க - அவள்
தாங்கிய கைகளில் தாமரைபூ இதம்
தன்னை உணர்ந்தவனாய் - அங்கு
ஆங்கவள் மேனியில் அத்தனைஇன்பமென்
றன்பில் திளைத்தவனை
ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆற்றலில் தூரநின்றே - இனி
தேனது மாந்திய வேளையில் திடுமென
தடதடவெனும் சத்தம் - அட
ஏனது கூச்சலும் இத்தனை சத்தமும்
என்றயல் கேட்டெழவும் - ஆ..
போனதுன் உயிருடன் புறப்படு காத்திட
பின்னிருந் தொலி கேட்டான்
மன்னவனே தமிழ் சொல்லுவதால் உமை
மரணத் தேவியவள் - இனி
தன்னுடைகரமதில் தாங்கிட வருகிறாள்
தருமம் காக்குமெனில் - ஒரு
மின்னும் கணந்தன்னில் விட்டுபறந்திடு
மேனியும் வேண்டுமெனில் - உடன்
என்றவன் இயம்பிட இருக்கைவிட்டுமே
எழுந்தான் வழி நடந்தான்
கொல் உடன்கொல் என்று கூறித்துடித்தனர்
கொன்றே இனமழிப்போர்- பொய்
நில்லென உள்ளமும் சொல்லிடு ம்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் -இவர்
வெல்லென வீணரை வேண்டின உதவிய
வெற்று மதித்திறமும் - போய்ச்
சில்லெனும் உணர்வுகள் சீரளித்தேன் எனும்
சிறுமை யுணர்ந் தகன்றான்
கேட்டு ஒலிதிட்ட கூச்சலுக்கிடையினில்
கிழக்கொரு மண்டபத்தில் - எழிற்
பாட்டுமிசைத் தொலி கூட்ட மலர்க்கொடி
போலொரு கோதை நடம்- தனும்
ஆட்டமும் கொண்டிட ஆனந்தம் மேலிட
ஆகும் நிலைமை தனை இந்த
நாட்டைப் பிடித்திட்ட நஞ்சவ ரோடுடன்
நின்றவன் கண்டு கொண்டான்
தீட்டிய வேல்விழி திங்களெனும் முகத்
தேவதை ஆடிநிற்க - அவள்
பூட்டிய கொல்லெனும் பூமலர்பாதப் -
புறத்திரு பொற்சதங்கை -உடன்
காட்டிய தோஒலி கொல் என்றொலித்திடக்
கேட்டவன் தன்நிலையை
சாட்டியதாய் பழிகொண்டு நகைப்பினைச்
சார்ந்தது போலிருக்க
கூட்டியதாரென கோபங்கொண்டு ஆ..
கோதை நிறுத்துமென்றான்
தீட்டிய பொன்விழி திக்கில் திரும்பிடத்
தேவதை போலெழிலாள்
காட்டிய ஏளனம் கண்களில் மின்னிட
கன்னம் சிவந்தவளோ
ஆட்டம் நிறுத்திடும் எண்ணமில்லை அவள்
அவள் ஆடிக்கொண்டே யிருந்தாள்
வாட்டிய துன்பமும் அஞ்சும் மனத்துடன்
வந்த இடர்நிலையும்
கேட்டகொலை யெனும் கூச்சலும்சத்தமும்
கனவோ முறையறிய
ஈட்டி பிடித்தொரு சேவகன் நின்றிட
யாரங்கே என்றழைத்தான்
காட்டிவிரல் கொண்டு ஏவிய மன்னனை
காணா தவன் நடந்தான்
நாட்டிடை குறுநிலம் ஆளுவன் என்றொரு
நாமம் எனக்கெதற்கு
வீட்டினில் ஆடவன் கொள்ளும் மதிப்பதும்
வீழ்ச்சி யென்றே யிருக்க
தேட்டமும் செல்வமும் தந்தவர் நெஞ்சினில்
தீமை விஷம் இருக்கும்
காட்டிய அன்பிலும் கையணைக்கும் விதம்
காரணம் வேறிருக்கும்
வெட்ட வளர்த்திடும் ஆட்டின்நிலையென
வீரமும் விட்டுலைந்து
குட்டவும் குனிந்திடும் குவலய வாழ்வதில்
கொண்ட மகிழ்வுமென்ன
விட்டபிழைகளை முற்றும் திருத்திட
வேளை பிறந்திடுமோ
திட்டமிட்டே திசை மாற்றி நடந்தனன்
தேவை திருப்பமொன்றோ
போகட்டும் என்றுள முள்ளே குமுறிய
போதிலும் நொந்து மனம்
தீகொட்டும் வேதனை செல்லாக் காசென
சில்லறை யாக்கியதேன்
போர் கொட்டும்மேளமும் பொல்லாப்பகைதனை
பொற்றமிழ் மோதிநிற்க
வாய்கட்டி மௌனமும் வார்த்தை கெட்டேமனம்
வாழ்ந்திடும் தேவையென்ன
(தொடரும்)
No comments:
Post a Comment