திருப்பம் 7 வது பகுதி (முடிந்தது)
12. திருப்பம்
நொங்கு வளர் பெரு நெடிதெனும் பனைகள்
நெருநெரு என்றொலிக்க
தொங்கும் பனையிடை காய்ந்திடும் ஓலை
தென்றல் தொடக்கூசி
அங்கிங் கெனவும் ஆடிடும் ஓசையும்
அரண்மனை கொடிமுகமாய்
எங்கு மெழுந்திடும் ஒசையைக் கேட்டதும்
அரண்டிடும் புரவி நிற்க
ஓங்கிய கோபுரம், உச்சியிற்பொன்முடி
உதயக் கிரகணங்கள்
தாங்கியே தகதக எனுமெழில் மின்னிய
தனையே நோக்கியதாய்
ஏங்கிய மனதுடன் இளவய துடையவன்
இறையவள்தனை வேண்ட
தேங்கிடும் பயமெழ திரையிடும் விழிநீர்
தொட்டிட உட்சென்றான்
செந்நிறத் தீயாய் திக்கிலெழுமத்
திருமகள் சிலைமுன்னே
சுந்தர நிலவின் ஒளி பெறு வானில்
சாமரைமுகில் வீச
தந்திடும் மளவில் தன்முகவண்ண,
தண்முகம் அழகென்றே
சிந்திடுமா பய செம்மையில் வானடி
செவ்வரி வடிவாக
வீரத்தாயவள் முன்னே வந்தோன்
வீழ்ந்தே கிடக்கின்றான்
நீரைப்பிரிந்த ஆம்பல் போலே
நீளக் கிடந்தோனை
ஓரக் கண்ணால் வீரத்தாயும்
விழி கொண்டே கண்டு
யாரப்பாநீ கேளாயென்றே
கூறும் மொழிகேட்டான்
வெள்ளி முளைக்கும் முன்னே நீயும்
வீரம் பெறவேண்டும்
அள்ளி யெடுத்தே ஆற்றல்கொண்டும்
அதிரும் நடைவேண்டும்
தெள்ளென அறிவும் திடமும்பார்வை
தீயென ஒளிவீசி
கொள்ளையர்பூமி கொடுமைகள் நீங்க
குமுறும் மனம் வேண்டும்
தீயன கண்டே தேசப்புதல்வர்
தேர்ந்தோர் வழிநோக்கி
தூயன எணணித் தோள்களில் பாரம்
தூக்கும் நிலைவேண்டும்
தாயெனப் போற்றி தாய்மண் காக்கும்
தன்மை பெறவேண்டும்
தேய்ந்துவிடாது திசையை மாற்றும்
திருப்பங்கள் வேண்டும்
(முற்றும்)+
12. திருப்பம்
நொங்கு வளர் பெரு நெடிதெனும் பனைகள்
நெருநெரு என்றொலிக்க
தொங்கும் பனையிடை காய்ந்திடும் ஓலை
தென்றல் தொடக்கூசி
அங்கிங் கெனவும் ஆடிடும் ஓசையும்
அரண்மனை கொடிமுகமாய்
எங்கு மெழுந்திடும் ஒசையைக் கேட்டதும்
அரண்டிடும் புரவி நிற்க
ஓங்கிய கோபுரம், உச்சியிற்பொன்முடி
உதயக் கிரகணங்கள்
தாங்கியே தகதக எனுமெழில் மின்னிய
தனையே நோக்கியதாய்
ஏங்கிய மனதுடன் இளவய துடையவன்
இறையவள்தனை வேண்ட
தேங்கிடும் பயமெழ திரையிடும் விழிநீர்
தொட்டிட உட்சென்றான்
செந்நிறத் தீயாய் திக்கிலெழுமத்
திருமகள் சிலைமுன்னே
சுந்தர நிலவின் ஒளி பெறு வானில்
சாமரைமுகில் வீச
தந்திடும் மளவில் தன்முகவண்ண,
தண்முகம் அழகென்றே
சிந்திடுமா பய செம்மையில் வானடி
செவ்வரி வடிவாக
வீரத்தாயவள் முன்னே வந்தோன்
வீழ்ந்தே கிடக்கின்றான்
நீரைப்பிரிந்த ஆம்பல் போலே
நீளக் கிடந்தோனை
ஓரக் கண்ணால் வீரத்தாயும்
விழி கொண்டே கண்டு
யாரப்பாநீ கேளாயென்றே
கூறும் மொழிகேட்டான்
வெள்ளி முளைக்கும் முன்னே நீயும்
வீரம் பெறவேண்டும்
அள்ளி யெடுத்தே ஆற்றல்கொண்டும்
அதிரும் நடைவேண்டும்
தெள்ளென அறிவும் திடமும்பார்வை
தீயென ஒளிவீசி
கொள்ளையர்பூமி கொடுமைகள் நீங்க
குமுறும் மனம் வேண்டும்
தீயன கண்டே தேசப்புதல்வர்
தேர்ந்தோர் வழிநோக்கி
தூயன எணணித் தோள்களில் பாரம்
தூக்கும் நிலைவேண்டும்
தாயெனப் போற்றி தாய்மண் காக்கும்
தன்மை பெறவேண்டும்
தேய்ந்துவிடாது திசையை மாற்றும்
திருப்பங்கள் வேண்டும்
(முற்றும்)+
No comments:
Post a Comment