காரிருள் கூந்தல் கலைந்து புவிமுகக்
காணுமெழில் மறைக்கத் -தலை
வாரியிருள் குழல்பூ முடித்தாள் புவி
வண்ணம் மகள், அதனால் - அவள்
பேரழகோ பெரும் வானத் தெருவினில்
பேர்புகழாய் பரவ - ஒளித்
தேரில் கதிரவன் தேவதையைக் காணத்
திக்குகிழக் கெழுந்தான்
விட்டிருள் போகுமவ் வேளை மலர்களின்
வாசம் எழுந்துவர - முன்னே
சட்டென நின்றுதன் செட்டை அடித்துஓர்
சங்கதி சேவல் சொல்ல - குளிர்
முற்றமதில் சிறுபுல்லின் பனி பாதம்
பட்டுத் பன்னீர் தெளிக்க - ஒரு
கச்சல் சுவைவேம்புக் குச்சி முறித்துப்
பல்லிட்டுக் குறுநடந்தேன்
மெத்தையெனும் மணல் மீதுவீசுதென்றல்
தொட்டு உதிர்த்துவைத்த - சில-
செத்தல் சருகில்கால் வைத்த அடியிடை
சட்டென்று சத்தமிட அயல்
கட்டைவேலி தென்னங் காணியருகிலோர்
வட்டக்குள மிருக்கும் - பக்கம்
தோட்டக் தரையினை நோக்கி நடந்திட்டேன்
சூழ் இருள்போக முன்னே
சற்றுநடந்து நான் வெட்ட வெளிவரச்
சம்பவம் ஒன்று கண்டேன்- நிறை
சுற்றிக் கமுகும்நல் மாதுளைத் தோட்டமும்
சூழ்ந்ததொரு திசையில் சிறு
பற்றி எரிகின்ற தீப்பந்து போலொன்று
பக்கம் எழும்பக் கண்டேன். அதைச்
சுற்றி எவரும்கண் காணவில்லை தனி
யாகத்தீ ஆடக்கண்டேன்
கொள்ளிவால் பேயொன்று கொல்ல வருகுது
ஐயோ என்றே அலறி - அருள்
வள்ளிமுருகனே நல்லூர்வாழ் வேலனே வா
எனைக்காக்க என்றேன் - ஆகா
வள்ளியும் இல்லையோர் கந்தனுமில்லை நீ
வா என்ற வேலனில்லை - அட
எல்லா உலகமும் எம் வசமானது
என்றச ரீரி கேட்டேன்
”யாரது என்று திரும்பி நின்றேன் ஒரு
ஆளோ உருவமில்லை - எவர்
நேரில் வருவது விட்டொரு கோழைநீ
எங்கொழிந்தாய்” எனவோ - உடன்
”நேரில் வருவது எங்கள் குணமல்ல
நேர்மை நீதியறியோம் பெரும்
பாரில் இழைத்திடும் பாதகம் ஒன்றேநாம்
பண்ணும் செயல”தென்றான்
ஏது பெயர் உனக்கென்ன குறை நீ
எண்ணுவதென்ன என்று - என்
காதுமட்டும் கேட்ட தாழ்குரல் நோக்கி நான்
கேள்வியைப் பாயவிட்டேன் - அட
பேய் உலகாளு மிப்பேரரசன் எனை
யாரென்று கேட்டு விட்டாய் உன்
ஆவி எடுத்துந்தன் மெய்கிழித் துக்குடல்
மாலை கொள்வேனடா பார்
என்றகுரல் நோக்கி ஆகா ஏதெண்ணம்நான்
இன்னும் குழந்தையல்ல - நீயும்
எங்கோ மறைந்துநின் றென்பெயர் பேய்என்றால்
நம்பநான் மூடனல்ல - இதை
சொன்னதும் தீயொளி மீண்டும்எழுந்தென்னை
சுட்டதைப் போல்நெருங்கி - அதோ
மண்ணில் விழுந்துமறைய எழுந்தது
மாய உருவமொன்று
கன்னக்கரு முகம், முன்னேவெளி வந்த
கண்களுடன் பெரும் பல்லிரண்டாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை
ஏது சொல்வேனொரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
சுந்தர ரூபப் பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்
காணுமெழில் மறைக்கத் -தலை
வாரியிருள் குழல்பூ முடித்தாள் புவி
வண்ணம் மகள், அதனால் - அவள்
பேரழகோ பெரும் வானத் தெருவினில்
பேர்புகழாய் பரவ - ஒளித்
தேரில் கதிரவன் தேவதையைக் காணத்
திக்குகிழக் கெழுந்தான்
விட்டிருள் போகுமவ் வேளை மலர்களின்
வாசம் எழுந்துவர - முன்னே
சட்டென நின்றுதன் செட்டை அடித்துஓர்
சங்கதி சேவல் சொல்ல - குளிர்
முற்றமதில் சிறுபுல்லின் பனி பாதம்
பட்டுத் பன்னீர் தெளிக்க - ஒரு
கச்சல் சுவைவேம்புக் குச்சி முறித்துப்
பல்லிட்டுக் குறுநடந்தேன்
மெத்தையெனும் மணல் மீதுவீசுதென்றல்
தொட்டு உதிர்த்துவைத்த - சில-
செத்தல் சருகில்கால் வைத்த அடியிடை
சட்டென்று சத்தமிட அயல்
கட்டைவேலி தென்னங் காணியருகிலோர்
வட்டக்குள மிருக்கும் - பக்கம்
தோட்டக் தரையினை நோக்கி நடந்திட்டேன்
சூழ் இருள்போக முன்னே
சற்றுநடந்து நான் வெட்ட வெளிவரச்
சம்பவம் ஒன்று கண்டேன்- நிறை
சுற்றிக் கமுகும்நல் மாதுளைத் தோட்டமும்
சூழ்ந்ததொரு திசையில் சிறு
பற்றி எரிகின்ற தீப்பந்து போலொன்று
பக்கம் எழும்பக் கண்டேன். அதைச்
சுற்றி எவரும்கண் காணவில்லை தனி
யாகத்தீ ஆடக்கண்டேன்
கொள்ளிவால் பேயொன்று கொல்ல வருகுது
ஐயோ என்றே அலறி - அருள்
வள்ளிமுருகனே நல்லூர்வாழ் வேலனே வா
எனைக்காக்க என்றேன் - ஆகா
வள்ளியும் இல்லையோர் கந்தனுமில்லை நீ
வா என்ற வேலனில்லை - அட
எல்லா உலகமும் எம் வசமானது
என்றச ரீரி கேட்டேன்
”யாரது என்று திரும்பி நின்றேன் ஒரு
ஆளோ உருவமில்லை - எவர்
நேரில் வருவது விட்டொரு கோழைநீ
எங்கொழிந்தாய்” எனவோ - உடன்
”நேரில் வருவது எங்கள் குணமல்ல
நேர்மை நீதியறியோம் பெரும்
பாரில் இழைத்திடும் பாதகம் ஒன்றேநாம்
பண்ணும் செயல”தென்றான்
ஏது பெயர் உனக்கென்ன குறை நீ
எண்ணுவதென்ன என்று - என்
காதுமட்டும் கேட்ட தாழ்குரல் நோக்கி நான்
கேள்வியைப் பாயவிட்டேன் - அட
பேய் உலகாளு மிப்பேரரசன் எனை
யாரென்று கேட்டு விட்டாய் உன்
ஆவி எடுத்துந்தன் மெய்கிழித் துக்குடல்
மாலை கொள்வேனடா பார்
என்றகுரல் நோக்கி ஆகா ஏதெண்ணம்நான்
இன்னும் குழந்தையல்ல - நீயும்
எங்கோ மறைந்துநின் றென்பெயர் பேய்என்றால்
நம்பநான் மூடனல்ல - இதை
சொன்னதும் தீயொளி மீண்டும்எழுந்தென்னை
சுட்டதைப் போல்நெருங்கி - அதோ
மண்ணில் விழுந்துமறைய எழுந்தது
மாய உருவமொன்று
கன்னக்கரு முகம், முன்னேவெளி வந்த
கண்களுடன் பெரும் பல்லிரண்டாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை
ஏது சொல்வேனொரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
சுந்தர ரூபப் பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்
No comments:
Post a Comment